போர்

சிங்கப்பூர் போதைப்பொருளுக்கு எதிரான போரை மேற்கொண்டுள்ளதாகவும் அவ்வாறு போரிடாவிட்டாலோ அப்போரில் தோல்வியுற்றாலோ ஆயிரக்கணக்கானோர் துன்புற நேரிடும் என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
ஜெருசலம்: தனது கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் காஸா மீதான போரை இஸ்ரேல் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பேச்சாளர் சதுக்கத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்று சிங்கப்பூர் காவல்துறையும் தேசிய பூங்காக் கழகமும் பொதுமக்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளன.
மாஸ்கோ: உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் தனது ராணுவத்துக்குக் கூடுதல் ஆயுதங்களை அனுப்பிவைக்க ரஷ்யா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கூடுதல் ஆயுதங்களை உற்பத்தி செய்து விரைவாக அனுப்பிவைக்கும்படி ரஷ்ய ஆயுத ஆலைகளுக்கு அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் செர்கே ஷொய்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்டன்: இஸ்ரேலிய ராணுவத்தின் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வெவ்வேறு சம்பவங்களில் மனித உரிமைகளை மீறியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கண்டறிந்துள்ளது. இருப்பினும், அப்பிரிவுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்றும் அது தெரிவித்துள்ளது.